business in Urakudi - முக்கிய தொழில்

முக்கிய தொழில்

காவிரி ஆறு பாய்வதால் இக் கிராமம் விவசாயத்தில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. நெல் ,பருத்தி, மிளகாய்  முக்கிய விவசாயங்களாகும். நெல், பருத்தி, மிளகாய் சாகுபடி ஆகியவற்றில் ஊரக்குடி பகுதி சிறந்து விளங்குகிறது. 

பிற தொழில் 
மற்ற விவசாயம் சார்ந்த தொழில்களான  கால்நடை வளர்ப்பு ,
  பால் உற்பத்தியில் ஊரக்குடி சிறந்து விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் ஆவின் மற்றும் தனியார் பண்ணைகளுக்கு அனுப்பப்படுகிறது.
எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால் விவசாயிகள் மிகுந்த விரக்தியில் இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில்  விவசாயிகள் மாற்றுத்தொழிலுக்கு மாறி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கருவேல மரங்கள் நிறைந்துள்ளதை பயன்படுத்தி, கருவேல மரங்களை வெட்டி கரிமூட்டம் தொழில் செய்து வருகின்றனர். 

அதில் கிடைக்கும் கறிகளை, உணவகங்களுக்கு மூட்டை ரூ800 வரை விற்பனை செய்து வருகின்றனர். விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக கருதும் இதற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது 

நீர்ப்பாசனங்கள் 

வைகை ஆறு வாய்க்கால் முக்கிய பாசனமாகும், 
வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் ஊரக்குடி கண்மாயில் சேமிக்கப்பட்டு பாசனத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது 

No comments:

Post a Comment